
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மதியம் பள்ளிக்கு அருகே இருந்த புதரில் இருந்து 2 நீளமுள்ள உடும்பு வந்தது. அந்த உடம்பு திடீரென பள்ளிக்குள் புகுந்ததை பார்த்தால் வாலிபர்கள் சிலர் உடும்பை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி வனத்துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்று உடும்பை வலைக்குள் போட முயற்சி செய்தபோது மீண்டும் உடும்பு தப்பி சென்று ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தது. இதனால் அச்சத்தில் மாணவ மாணவிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் உடும்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.