நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படம் சேலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மட்டுமே 5 காட்சிகள் திரையிட வேண்டும் எனவும் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணி வரை மட்டுமே திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதனைப் போலவே அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டால் திரையரங்கின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.