தாய்லாந்து நாட்டிலுள்ள சஷொன்சா மாகாணத்தில் அதிகாலை 3 மணி அளவில் லாரி ஒன்று மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த லாரி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் ஐந்து ஆண்கள் 3 பெண்கள் என எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.