
சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், ஓர் வயதான நபர் தூங்க இடம் இல்லாததால், ஓடும் லாரியின் பின்புற சக்கரத்தின் கீழே புத்திசாலித்தனமாக ஒரு படுக்கை அமைத்து அதில் தூங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் காணொளி, @sadiq_rathvi என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஏக் கட்டோலா டிரக் கே நீச்சே” என்ற தலைப்புடன் பதிவேற்றப்பட்டு சமூக ஊடகங்களில் தீயாக பரவியுள்ளது. இந்த வீடியோவில், லாரி சாலையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, அந்த நபர் கவலையின்றி படுக்கையில் சாய்ந்து தூங்குவது பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
View this post on Instagram
பலரும் இதனை ஒரு வியப்பூட்டும் திறமை என்றாலும், பெரும்பாலான நெட்டிசன்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி மற்றும் கவலையை வெளியிட்டுள்ளனர். ஒருவர், “ஓட்டுநரின் வாழ்க்கை எளிதல்ல, அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள் என்பதை யாரும் பார்ப்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “திடீரென்று பிரேக் அடித்தா என்ன ஆகும்?” எனக் கவலை தெரிவித்தனர். இத்தகைய முயற்சி எவ்வளவு ஆபத்தானது என்பதையும் இந்த வீடியோ நம்மை நினைவூட்டுகிறது.
பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டுநர்கள், தங்கள் உடல்நலனையும் உயிரையும் பாதிக்கும் இந்த மாதிரியான முறைகளை தவிர்க்க வேண்டும். இணையத்தில் புகழ் பெறவேண்டும் என்பதற்காக ஆபத்தான முயற்சிகளைச் செய்ய வேண்டாம் என்பதை இச்சம்பவம் வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது.