
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை பதிவு செய்வது அவசியம். அந்த வகையில் மத்திய அரசின் திட்ட அரிசிக்கு ஒரு முறையும் மாநில அரசின் திட்ட அரிசிக்கு ஒரு முறையும் என இரு முறை கை ரேகை பதிவு செய்ய வேண்டி உள்ளது.
இதனால் நேரம் விரயம் ஆவதாக பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் கூறிய நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது இனி மத்திய மற்றும் மாநில அரசின் திட்ட அரிசிகளை வாங்குவதற்கு ஒருமுறை மட்டுமே கைரேகை பதிவு செய்தால் போதும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய அறிவிப்பால் நேரம் மிச்சமாகும் என பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த புதிய அறிவிப்பால் இனி கூடுதலாக 20 முதல் 25 அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க முடிகிறது எனவும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.