மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ஆன்லைனில் 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு மூன்று சோப்பு கட்டிகள் கிடைத்துள்ளது. ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் தனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்தபோது மூன்று பார் சோப்புகள் இருந்தது.

செல்போன் பெட்டிக்குள் சோப்புகள் வைக்கப்பட்டிருந்தன. பார்சலை திறந்து யாராவது மோசடி செய்திருக்கலாம் என்று பயந்து போன அந்த இளைஞர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.