
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்வயா கிராமத்தில் ராஜூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீமா என்ற மனைவியும், வன்சிகா (10), அன்சிகா (6), பிரயான்ஷ் (3) என்ற மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சீமாவின் நடத்தையில் ராஜு சந்தேகப்பட்டுள்ளார். இதில் சீமாவுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதில் அதிக ஆர்வம் இருந்ததால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக சீமாவுக்கு ஆதரவுகள் பெருகிய நிலையில் ஒரு கட்டத்தில் முன்பின் தெரியாத நம்பர்களில் இருந்து எல்லாம் அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே தன் மனைவி மீது சந்தேகப்பட்ட ராஜுவுக்கு இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் தகராறு முற்றியது.
ஆத்திரத்தில் தன் மனைவியை அவர் செங்கலால் அடித்தார். இதில் நிலை தடுமாறிய சீமா சரிந்து கீழே விழுந்தார். ஆனால் அப்போதும் ராஜுவுக்கு ஆத்திரம் தீராததால் தன் குழந்தைகளை அவர் கட்டாயப்படுத்தி தூங்க வைத்தார். ஆனால் குழந்தைகள் தூங்காமல் தலையணை வழியாக நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கத்தியால் தன் மனைவியின் கழுத்தை அறுத்து அவர் கொடூரமாக கொலை செய்துவிட்டார். ஆனால் இந்த கொலையை குழந்தைகள் மூவரும் போர்வைக்குள் இருந்தபடி பார்த்துள்ளனர். பின்னர் தன்னுடைய செல்போன் மற்றும் மனைவியின் செல்போனை எடுத்துவிட்டு அங்கிருந்து ராஜூ தப்பி ஓடிய நிலையில் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சீமான் கடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தம்பி ஓடிய ராஜுவை வலைபேசி தேடி வருகிறார்கள்.