வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ஜீவின் சிங். இவர் வேலூரில் இருந்து சென்னையை நோக்கி தன்பாத் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது பிரகாஷ் படியில் அமர்ந்து பயணம் செய்தார்.

அவர் தன் கையில் செல்போனை வைத்து பார்த்துக் கொண்டிருக்கும்போது மர்ம நபர் ஒருவர் பிரகாஷிடம் இருந்த செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போனை திருடிய நபர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.