அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில், ஜூன் 1-ஆம் தேதி நடந்த ஒரு அமைதி நடைப்பயண நிகழ்ச்சியில் திடீரென ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது “Run for Their Lives” எனும் யூத அமைப்பு ஒவ்வொரு வாரமும் நடத்தும் இந்த நடைப்பயணத்தில், முகமது சப்ரி சோலிமான் (45) என்ற நபர், “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” என்று கூச்சலிட்டு, தீ பிடிக்க வைக்கும் பொருளை (மொலோடோவ் காக்டெய்ல்) கூட்டத்தில் வீசி தாக்கினார். இதனால் 6 பேர் தீக்காயமடைந்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். FBI இந்த தாக்குதலை “பயங்கரவாதச் செயல்” என அறிவித்துள்ளது. அதாவது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பணைய கைதிகளை விடுவிக்க வேண்டும் என  இந்த பேரணி நடைபெற்ற நிலையில் திடீரென ஒருவர் பாலஸ்தீன ஆதரவு கோஷத்துடன் பயங்கரமாக தாக்குதல் நடத்தினார்.

 

 

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் 67 முதல் 88 வயதுக்குள் உள்ள வயதானவர்கள். இதில் இருவர் அதிக தீக்காயங்களுடன் டென்வர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்ற நான்கு பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதல் நடந்தபோது பயமும் குழப்பமும் ஏற்பட்டது. மக்கள், தீப்பிழம்புகள் பரவாதவாறு உடனே காயமடைந்தவர்களின் உடைகளை கழற்றி உதவினர்.

 

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. கொலராடோ மாநில அதிகாரிகள் மற்றும் நகர மேயர் இந்த தாக்குதலை கண்டித்து, இது யூதர்களை குறிவைத்து மேற்கொண்ட “வெறுப்பால் நிரம்பிய தாக்குதல்” என கூறினர். இதனையடுத்து, அமைப்பினர் “நடையோடு வாழ்நாளை” நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என முடிவுசெய்துள்ளனர். போலீசார் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.