
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் வைத்து பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்தவர் 5 ஸ்டார் கதிரேசன். இவர் தனுஷ் மீது குற்றச்சாட்டை சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “கடந்த வருடம் நடந்த தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தனுஷ் எங்களிடம் முன் பணம் பெற்றுக் கொண்டு இன்றுவரை கால்ஷீட் கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கமும் தனுஷ் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும் போது நீங்கள் குறுக்கிட்டு இட்லி கடை படப்பிடிப்பு நடக்க வேண்டும். மேல் இடத்து உத்தரவு என்று கூறியதை மறந்தீர்களோ? எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தீர்கள்.
நாங்கள் புதிதாக படம் எடுக்கவில்லை . ஏற்கனவே தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். நீதி வழங்க தானே சங்கங்கள் இருக்கின்றன? தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. நீங்கள் வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்று தருமாறு வேண்டிக் கொள்கிறேன். தாங்கள் எடுக்கு முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே ” என்று தெரிவித்துள்ளார்.