முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா (42) மாரடைப்பால் காலமானார். ராஜஸ்தானை சேர்ந்த அவர், வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்துள்ளார். வீட்டார்கள் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு, அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.