தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் https://www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் இயக்குனர் ஆதிதிராவிடர் நல இயக்குனரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.