இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தானின் 178 ரன்கள் எடுத்ததால் 2 ரன்கள் வித்யாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக நேற்று முதல்முறையாக 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார்.

 

இந்த போட்டியில் வைபவ் 20 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியை ரசிகர்கள் உட்பட வீரர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்த நிலையில் வைபவ் அவுட் ஆனதும் ரன்களில் கண்ணீருடன் வெளியேறினர். அதே நேரத்தில் அவரை சஞ்சீவ் கோயங்கா உட்பட பலரும் பாராட்டினர். மேலும் சஞ்சு சாம்சன் உட்பட வீரர்கள் அவரை தேற்றிய நிலையில் 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.