
சென்னை மாவட்டம் திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஐந்து ஆண்டுகளில் 800 நாட்கள் நாம் தேர்தலுக்காக செலவு செய்கிறோம். இதனால் நாம் வளர்ச்சிக்காக கவனம் செலுத்தாமல் தேர்தலுக்காகவே ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தலை பற்றி மக்களுக்கு புரிய வைக்கவே நான் இங்கு வந்தேன். எல்லாவற்றிற்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு முடிவு கொண்டு வரும் என கூறியுள்ளார்.