
ஐபிஎல் 2025 தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியின் போது சுப்மன் கில் அபிஷேக் சர்மாவை விளையாட்டாக எட்டி உதைத்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிகழ்வு, போட்டியின் 14-வது ஓவரில் இடம் பெற்றது. அபிஷேக் சர்மா டிஆர்எஸ் விவகாரத்தில் அம்பயருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, கில் அவரிடம் அமைதியாக இருக்குமாறு கூறினார். பிறகு கில் அருகே வந்தபோது, சிகிச்சை பெற்று கொண்டிருந்த அபிஷேக்கை, விளையாட்டாக அவரது காலால் லேசாக உதைத்தார்.
Subman Gill and Abhishek Sharma Funny moments #Abhishek#GTvsSRH #Gill pic.twitter.com/dcahauyeO6
— The KALKI 🗡️ (@TheKalkispeaks) May 2, 2025
அதே ஓவரில் அபிஷேக் சர்மா அவுட்டானார். அந்த போட்டியில் கில் 76 ரன்கள் விளாசியதில், குஜராத் அணிக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டது. இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மைதானத்தில் தோன்றிய நட்பு பார்வையாளர்களை கவர்ந்தது. இது போன்ற விளையாட்டு நட்புகள் தான் ஐபிஎல் போட்டிகளின் தனிச்சிறப்பாகவும் திகழ்கின்றன.