உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த திருமணமொன்று தற்போது செய்திகளில் பெரிதும் பேசப்படுகிறது. சித்தாரா என்ற பெண், தனது பெற்றோர் சம்மதத்துடன் கப்தான் என்ற இளைஞருடன் திருமணம் செய்து கொண்டார். பஞ்சு–பஜா, விருந்தினர் மற்றும் ஊர்வலங்களுடன் கோலாகலமாக நடந்த திருமணம், திருமண இரவிலேயே கடுமையான பரபரப்பாக மாறியது.

திருமணமான பிறகு, முதல் இரவில் வைத்து மணமகள் தனது கணவரிடம், “என்னைத் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன்; நான் வேறொருவரின் சொத்து” என்று கூறி, கத்தியைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஒரே ஒரு இரவில் நடந்த சம்பவம் மட்டுமல்ல, தொடர்ந்து மூன்று நாட்களாக இரவுகள் கணவர் மீது மன அழுத்தத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் தேனிலவுக்கும் செல்ல முடியாமல், மன வேதனையில் உறைந்து விட்டார்.

மேலும், மணமகள் தனது காதலன் அமனுடன் வாழ்க்கை அமைக்க விருப்பம் உள்ளதாக வெளிப்படையாகக் கூறியதையடுத்து, இந்த விவகாரம் குடும்பத்தை கடந்துப் போலீஸ் நிலையம் வரை சென்றது. பஞ்சாயத்தும் நடந்தது. இடையில் அந்த மணமகள் தன்னுடைய காதலனுடன் வீட்டின் சுவர் ஏறி குதித்து இரவு நேரத்தில் ஓடிவிட்டார்.‌தற்போது பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் அவரது குடும்பம் போலீஸ் நிலையத்திலல் காயத்திற்காக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் திருமணத்திற்கு முன்பு அந்த பெண் விருப்பமில்லை என்று கூறுவதற்கு பதிலாக திருமணமான பிறகு முதலிரவில் இப்படி கணவனை கத்தியை காட்டி மிரட்டி கள்ளக்காதலனுடன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.