இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை குடியரசுத் தலைவரும் பிரதமரும் வரவேற்றனர். இந்த நிலையில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது, இந்தியாவில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தசு வழங்கப்பட்ட போது இலங்கையிலும் அது விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சென்னை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை கப்பல் சேவை ஆகியவை சுற்றுலாவை பலப்படுத்தி நமது கலாச்சார உறவுகளை வலுப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையே கப்பல் சேவை தொடங்க முடிவு செய்திருக்கிறோம்.

மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து பேசினோம் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது எங்கள் கருத்து. இலங்கையில் கட்டுமான மற்றும் நல்லிணக்கம் குறித்து பேசினோம் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கையின் அரசியல் அமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான உறுதி மொழியை இலங்கை அரசு நிறைவேற்றும் என நான் நம்புகிறேன். இலங்கை அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கான முயற்சியில் இந்தியா எப்போதும் நம்பகமான அண்டை நாடாக இருக்கும் என்று நான் உறுதி அளித்துள்ளேன் என பிரதமர் கூறியுள்ளார்.