இயக்குனர் சுந்தர்.சி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி அரண்மனை, முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் கதாநாயகர்கள் உடன் இணைந்து நடித்தார். இந்நிலையில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற தலைநகரம் திரைப்படத்தின் 2-ஆம் பாகம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் சுந்தர்.சி மீண்டும் தனி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வி.இசட் துரை டைரக்டு செய்து உள்ளார்.

பட நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசியதாவது “தலைநகரம் 2-ம் பாகத்தை எடுக்கலாம் என யார் கூறினாலும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் டைரக்டர் துரை கேட்டதும் உடனே சம்மதித்தேன். தற்போதெல்லாம் ஒரு படம் ரிலீசாகி முதல் ஷோ ஓடினதும் வெற்றி விழா கொண்டாடி விருந்து வைத்துகொள்கிறார்கள். இனி நாமும் அதை செய்யவேண்டும். அரண்மனை போன்று தலைநகரம் படமும் எனக்கு அடுத்தடுத்த பாகங்கள் கொண்ட படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.