
பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த ரூ.50,000 ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர ஆக.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் பேருந்து சேவையை மேம்படுத்த ஆலோசனை வழங்கும் நிபுணர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
நகர்ப்புற திட்டமிடல், போக்குவரத்து திட்டமிடல் மற்றும் போக்குவரத்து பொறியியலில் முதுநிலை பட்டப்படிப்புனர் ஓராண்டு முன் அனுபவம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையுடன் ஓராண்டுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் [email protected], [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.