
மத்திய பிரதேச மாநிலத்தில் 32 வயது பெண் வசித்து வருகிறார். அந்த பெண்ணிடம் பக்கத்து வீட்டு நபர் தவறாக நடக்க முயன்றார். இதனை அறிந்த அந்த பெண்ணின் மாமனாரும் மாமியாரும் அதனை கள்ள தொடர்பு என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் குடும்பத்திற்கு அவப்பெயர் கொண்டு வந்து விட்டதாக கூறி அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தடவி, இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாமியார் மற்றும் மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.