அமெரிக்காவில் ஆண்ட்ரே டெம்ஸ்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 28 வயது ஆகும் நிலையில் திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு வயதில் குழந்தை இருந்துள்ளது. இதில் ஆண்ட்ரேவுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்பத்த தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர் தன்னுடைய மனைவி மற்றும் மாமியாரை தாக்கியுள்ளார்.

இதனால் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி காவல் நிலையத்தில் சென்ற புகார் கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த ஒரு வயது ஆண் குழந்தையை தலையை துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் இவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குடும்பத் தகராறில் ஒரு வயது குழந்தையை தலையை துண்டாக வெட்டி தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.