பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடையில் பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்து, கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நண்பர்கள் குழு ஒன்று 12 பீர் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். அதில் ஒரு பாட்டிலில் பீர் குறைவாக இருந்துள்ளது.

இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்க சென்றபோது அந்த பாட்டிலில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இதனால் அங்கு வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அரசு மதுபான கடை சற்று நேரம் மூடப்பட்டது. பின்னர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் இருந்து காவல்துறையினர் வந்து அந்த நபர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.