உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்த உதயநிதி, ‘கொரோனா சமயத்தில் இழப்பீடு தந்தாரா? ஆறுதல் சொன்னாரா? மணி ஆட்டுங்க. விளக்கு பிடிங்க. சத்தம் போடுங்க. கொரோனா வைரஸ் ஓடிடும்னு சொன்னவர் தான் மோடி. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 பைசா கூட போடாதவர்’ என கடுமையாக சாடினார்.