சென்னை மாவட்டம் ஜி கே எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி வினோதினி அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்வதற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் தங்க நகை வைக்கப்பட்டிருந்த மணப்பெண் அறையை பூட்டிவிட்டு வினோதினி சாப்பிடுவதற்காக சென்றார். திரும்பி வந்தபோது அறைக்கு வெளியே 2 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒரு நபர் அறையைத் திறந்து உள்ளே எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வினோதினி பெண் வீட்டாரை அழைத்து மூன்று நபர்களையும் அடையாளம் காட்டினார். பின்னர் பெண் வீட்டார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நகையை திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த குமார்(33), பத்ரி விஷால்(19), சூரஜ்(28) என்பது தெரியவந்தது.

மூன்று பேரும் அதே திருமண மண்டபத்தில் தூய்மை பண்ணி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் மாற்று சாவியை வைத்து அறையைத் திறந்து திருட முயன்றது தெரியவந்தது. இதனால் மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.