மக்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்திய திருநாடு நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காக்கும் வண்ணம் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளோம். 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது என்ற வெற்றி செய்திதான், தமிழ்நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் முழக்கமாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.