மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் முதல் GBS என்ற நரம்பியல் கோளாறு நோய் பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கம் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் இருக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் கூட ஒரு சிறுவன் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்தான். அதாவது இந்த நோய் வந்தால் மனிதனின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளை தாக்கி கை கால்கள் மரத்து போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

இந்த நோய் பாக்டீரியா  தொற்றால் பரவும் நிலையில் அறிகுறி தெரிந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இந்த நோய் பாதிப்பினால் இதுவரை 205 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் 8 பேர் ஜிபிஎஸ் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் மும்பையில் 53 வயதில் மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்தார். இதனால் அங்கு மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.