சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதைத்தொடர்ந்து ஜனவரி 31 ஆம் தேதி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று பிப்ரவரி 2-ம் தேதி மற்றும் 3-ம் தேதிகளிலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவக்கூடும். இங்கு அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.