மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கிய எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி 214 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் 65 இடங்களிலும் மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்க உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது இன்னும் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது தெளிவாகவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார். மேலும் இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.