மத்திய பிரதேஷ் மாநிலம் முரண் நாம் மாவட்டத்தை சேர்ந்த சரிதா என்ற பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவரது கணவர் சோனு சரிதாவை கடுமையாக பேசியதோடு தனது சகோதரன் விரேந்தரா மற்றும் அவரது மனைவி ரீனாவை அழைத்து தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

வீட்டிலிருந்து சரிதாவை வெளியில் இழுத்து போட்டு கொடூரமாக குடும்பமே சேர்ந்து தாக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சரிதா காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.