தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வரங்கல் மாவட்டத்தில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் கம்பிகளை ஏற்றி சென்றனர். இந்த நிலையில் லாரி எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் அதிலிருந்த கம்பிகள் அருகே சென்ற ஆட்டோ மீது சரிந்து விழுந்தது. இதனால் கம்பிகள் குத்தியதால் ஆட்டோவில் சென்ற 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் போதையில் வாகனத்தை வேகமாக இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.