
கன்னட சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ரிஷப் செட்டி. இவர் கடந்த வருடம் காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்த நிலையில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவான காந்தாரா திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரின் பாராட்டுகளையும் பெற்று வசூல் மழை பொழிந்தது. இந்நிலையில் காந்தாரா 2 குறித்த அறிவிப்பு கடந்த வருடம் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அதாவது காந்தாரா படத்தின் முன்பாகத்தை தான் தற்போது இரண்டாம் பாகமாக எடுத்துள்ளனர். அதன்படி காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியாகும் என்று தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.