தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4ஆம் தேதி ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 30,791 சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.