
மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. அதாவது ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதிலடியாக இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய குடியரசு ஒளிபரப்பு நிறுவனம் (IRIB) குறிவைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. அந்த நேரத்தில், தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும், ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் நேரடி ஒளிபரப்பிலேயே இடம்பெற்றதால், ஈரானிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிர்ச்சி கிளம்பியுள்ளது. IRIB கட்டிடம் மீது நேரடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால், அந்த பகுதியிலுள்ள ஊடக மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து இந்த வகை தாக்குதல்கள் தொடரும் நிலையில், மத்திய கிழக்கு பகுதி மேலும் தீவிரமான நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
The building of IRIB in Tehran, the Islamic Republic of Iran Broadcasting, a propaganda outlet for the Mullahs, was just bombed.#IsraeliranWar #Iran #Israel #Tehran pic.twitter.com/0Wz9vIbThb
— Erez Neumark 🇮🇱🇧🇪 (@ErezNeumark) June 16, 2025