மேற்கு ஆசிய நாடான சிரியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டமாஸ்கஸ் நகரில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட பிரார்த்தனை நடைபெற்று வந்தது. அந்த நேரத்தில், தேவாலயத்தில் மக்களோடு கலந்திருந்த ஒருவன் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்.

இந்த பயங்கர தாக்குதலால் இடம் பெரிய அளவில் சேதமடைந்தது. சிரியா சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 52 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்கொலைப்படை தாக்குதலை யார் மேற்கொண்டது என்பதற்கான தகவல்கள் வெளியாகவில்லை. அதற்கான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மார எலியாஸ் தேவாலயத்தில் நடந்த இந்த தாக்குதல், சமாதானமாக பிரார்த்தனை செய்த மக்களின் உயிரைப் பறித்தது என்பதாலேயே மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.