பெங்களூரு நகரத்தின் ஜெயநகர் பகுதியில் உள்ள ஷோரூம் அருகே, ஒரு பெண்ணை ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரைவர் பெண்ணை கன்னத்தில் அறைந்து அவர் கீழே விழும் காட்சிகள் ஒரு வீடியோவில் பதிவாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக வேறு ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தான் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராபிடோ பைக் டாக்சி ஓட்டுநரை தாக்கியுள்ளார்.

அதன் பிறகு வாக்குவாதம் முற்றி பதிலுக்கு அந்த நபர் தாக்கியதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.