கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசு பேருந்து ஓட்டுனர் பெண்ணின் கார் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். அதாவது மே 23ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அந்த பெண்ணின் காரும் பேருந்தும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்ற நிலையில் பேருந்தின் மீது ஏறினார். அந்தப் பெண்ணுக்கும் ஓட்டுநருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென ஓட்டுனர் பேருந்து எடுத்து விட்டார்.

 

அந்தப் பெண் பேருந்து முன்பாக நின்று கொண்டிருந்தபோதே திடீரென அவர் அந்த பெண்ணை இடித்து தள்ளிவிட்டு பேருந்து அங்கிருந்து எடுத்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்ட நிலையில் தற்போது அந்த பேருந்து ஓட்டுநரை அடையாளம் கண்டு போக்குவரத்து கழகம் இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இது சம்பவம் தொடர்பான வீடியோவை வைத்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.