
கர்நாடக சட்டசபையில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது பட்ஜெட் மீதான விவாத தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ வைத்த கோரிக்கை சர்ச்சையாக மாறியுள்ளது. இது தொடர்பாக எம்எல்ஏ கிருஷ்ணாப்பா சட்டசபையில் பேசியதாவது, கலால் வரியை ஒரு வருடத்தில் மூன்று முறை அரசு உயர்த்தியதால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கையில் மீண்டும் வரியை உயர்த்தினால் எப்படி 40 ஆயிரம் கோடி இலக்கை அரசால் அடைய முடியும்.
பொதுமக்கள் குடிப்பதை நம்மால் தடுக்க முடியாது. குறிப்பாக உழைக்கும் வருடத்தினர் குடிப்பதை நிறுத்தவும் முடியாது. பெண்ளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் கொடுப்பதோடு, இலவச பேருந்து பயணம் மற்றும் இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதேபோன்று ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு மது பாட்டில்கள் இலவசமாக வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். இல்லையெனில் ஆண்களுக்கு வேறு எந்த வழியில் பணத்தை வழங்க முடியும் என்றார். மேலும் இது விவாதமாக மாறிய நிலையில் எரிசக்தி துறை அமைச்சர் நீங்கள் ஆட்சி அமைத்த பிறகு இந்த கோரிக்கையை நிறைவேற்றுங்கள் அதுவரை நாங்கள் மக்களை குடிக்காமல் பாதுகாத்து வருகிறோம் என்று கூறினார்.