ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில், 13 அடி நீளமுள்ள பெரிய கிங் கோப்ரா பாம்பு ஒன்று தோன்றியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பயந்து ஓடினர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர். ஆனால், பாம்பு மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. பாம்பு பிடிப்பவரை நோக்கி பாய்ந்து, புஸ்ஸென்று சத்தமிட்டு அனைவரையும் பயமுறுத்தியது.
இந்த முழு மீட்பு பணியும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் ஒரு மணி நேர முயற்சிக்குப் பிறகு, வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது. இந்த கிங் கோப்ரா 13-15 அடி நீளமும், மிகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது. பாம்பு பிடிப்பவர் திறமையாக செயல்பட்டு, அதை கட்டுப்படுத்தினார்.
King Cobra Creates Panic in Kankhal, Rescued by Forest Department
An angry and ferocious King Cobra created panic in the Lakkar Basti area of Kankhal Bairagi Camp on Sunday. Locals were terrified after spotting the massive and aggressive snake slithering through the settlement.… pic.twitter.com/z8drKSDwNM
— Kumaon Jagran (@KumaonJagran) October 26, 2025
பின்னர், பாம்பு ராஜாஜி டைகர் ரிசர்வில், மனிதர்கள் வசிக்காத பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்த மீட்பு நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலரும் இதைப் பற்றி பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். வனத்துறை, பாம்புகள் அல்லது வனவிலங்குகளை பார்த்தால், தாங்களாக எந்த முயற்சியும் செய்யாமல், உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
