அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை புஷ்பா 2 திரைப்படம் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த  காதலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் புஷ்பா 2 படம் பார்க்க காதலி ஆசைப்பட்டார். ஆனால் காதலன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மன உளைச்சலில் காதலி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.