புது வருடம் பிறப்பதற்கு இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது. மக்கள் புதுவருடத்தை வரவேற்க்க தயாராக இருக்கிறார்கள். எப்போதுமே புத்தாண்டை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.