கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். இந்த நிலை பொங்கல் வரை மட்டுமே நீடிக்கும் எனவும் அதன் பின்னர் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.