
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ஒரு பிரபலமான பப் அமைந்துள்ளது. இந்தப் பப் நிர்வாகம் புத்தாண்டு கொண்டாட ஒரு அழைப்பிதழை அனுப்பியுள்ளது. அதனுடன் காண்டம்ஸ் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் போன்றவற்றையும் சேர்த்து அனுப்பியுள்ளது சர்ச்சையாக மாறியுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் இளைஞர் அமைப்பு சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புனே காவல்துறை ஆணையரிடம் அமித்தேஷ்குமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது நாங்கள் புத்தாண்டு கொண்டாடத்திற்கு எதிரானவர்கள் கிடையாது அதே சமயத்தில் இப்படி இளைஞர்களை கவர்வதற்காக செய்வது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். மேலும் அந்த பப் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.