புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ஜ.க-வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் மாநில கட்டமைப்பில் மேம்பாடுகளை செய்யும் நோக்கத்தில் கட்சி மேலிடம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் – வி.பி. ராமலிங்கம், அசோக் பாபு, வெங்கடேசன் ஆகிய மூவரும் சட்டப்பேரவைக் சபாநாயகர் செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர்.

இந்த முடிவுகள் பா.ஜ.க.-வில் புதிய பொறுப்புகளுக்கான வாய்ப்புகளைத் திறக்கக்கூடும் என கருதப்படுகிறது. புதிய நியமன எம்.எல்.ஏ.வாக வீராம்பட்டினத்தைச் சேர்ந்த பழனி, காரைக்காலிலிருந்து ஜி.என்.எஸ். ராஜசேகர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூன்று நியமன எம்எல்ஏக்களில் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்.