
மும்பையைச் சேர்ந்த முருகய்யா கார்த்திக் ஆகியோர் வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் முருகையா கார்த்தி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்கள் மும்பையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்தால் 400 வலி நிவாரண மாத்திரைகள், 3.85 லட்சம் ரூபாய் பணம், 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.