தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கட்டட அமைப்பில் அதாவது பி ஆர் படிப்புக்கு அரசு ஒதுக்கிட்டில் 1,905 இடங்கள் உள்ளது. இதில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 3200-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை சான்றிதழ்களுடன் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையவளியில் கலந்தாய்வு ஆகஸ்ட் 17 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.