சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் ஒரு பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு இளம்பெண்கள் சிலர் இரவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளம் பெண்களை சிலர் வழிமறித்து கொடூரமாக தாக்கினர். கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் வாலிபர்கள் சிலர் அந்த பெண்களை கொடூரமாக தாக்கியதோடு அவர்களின் கைவிரல்களையும் பிடித்து கடித்து வைத்தனர்.

ஒரு பெண்ணின் விரலை அவர்கள் கடித்ததில் அவருக்கு ரத்தமே வந்துவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் போலீசார் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி கூறியுள்ளார். மேலும் இதோ அந்த வீடியோ,