தொலைக்காட்சி நடிகையும் பிரபல தொகுப்பாளருமான விஷ்ணு பிரியா வீட்டில் நேற்று முன்தினம் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விஷ்ணுபிரியாவின் தாய் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில் விஷ்ணு பிரியா தனது தாயை நினைவுகூர்ந்து இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகரமான பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், “எனக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்க நீங்கள் செய்த அனைத்து தியாகங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறியுள்ளார். இதை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.