
தமிழ் சினிமா எடிட்டர் உதயசங்கர். இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். இவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள செம்பருத்தி, ராஜமுத்திரை, குற்ற பத்திரிக்கை, அரசியல் மற்றும் மக்களாட்சி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.
அவர் இன்று உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் நாளை இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.