பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்‌ நடிகை சித்ரா. சென்னையைச் சேர்ந்த இவர் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஹேம்நாத் என்பவருடன்  திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மர்மமான முறையில் ஒரு விடுதியில் சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.

அவருடைய மரணத்திற்கு எதிர்கால கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறி பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த நிலையில் இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை தெரிவித்துள்ளது. அதாவது சித்ராவின் கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று கூறும் நிலையில் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை. மேலும் இதன் காரணமாக வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.