தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி நடிப்பில் சகுனி என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்குனர் சங்கர் தயாள் இயக்க இருந்தார். இந்த படத்திற்கு பிறகு பல வருடங்களுக்கு பிறகு நடிகர் யோகி பாபுவை வைத்து குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்ற போது தனக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக இயக்குனர் சங்கர் தயாள் கூறியுள்ளார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் அவருக்கு 54 வயது ஆகும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.